Breaking

Tuesday 30 April 2019

TNPSC அறிவிப்பு(19.04.2019) | மீன்வள துறை பணியிடத்துக்கான அறிவிப்பு


TNPSC அறிவிப்பு
தமிழக அரசின் மீன்வள துறை பணியிடத்துக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது(19.04.2019). இந்தப் பணியிடத்துக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியாக உள்ள இடம் - 1


பணிகளை பற்றிய விவரம் 

பணி  : ஆய்வக உதவியாளர் 
சம்பளம் : மாதம்  ரூபாய். 35,900 - 1,13,500
தகுதி : முதல் அல்லது இரண்டாம் வகுப்பு 
விலங்கியல் (OR) தாவரவியல் (OR) வேதியியல் இவற்றில் ஏதாவது ஒன்றினை முதன்மைப் பாடமாக கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு 
30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பு தளர்ச்சி வழங்கப்படும். 


தேர்வு செய்யப்படும் முறை 
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


தேர்வு மையங்கள் 
சென்னை, மதுரை, கோயம்புத்தூர்.

விண்ணப்ப கட்டணம் 

ஒரு முறை பதிவு கட்டணம் ரூபாய் 150 மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 150(ஒருமுறை பதிவு செய்த One-Time Registration ஐந்து வருடங்கள் வரை செல்லுபடியாகும்). மொத்தம் ரூபாய் 300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை 
என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.05.2019 
 மேலும் தகவல்களுக்கு இந்த PDF ஐ காண்க.








No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491